close
Choose your channels

ஓபிஎஸ் அணியில் மேலும் ஒரு அதிமுக மூத்த அமைச்சர்

Saturday, February 11, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழக மக்களும் அதிமுக தொண்டர்களும் ஓட்டுமொத்தமாக முதல்வர் ஓபிஎஸ் அவர்களுக்கு ஆதரவு கொடுத்து வரும் நிலையில் ஒருசில எம்.எல்.ஏக்கள் மற்றும் அமைச்சர்களின் ஆதரவை மட்டுமே வைத்துக்கொண்டுள்ள சசிகலா, தன்னை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருவதை தமிழக மக்கள் ஒரு வெறுப்புடனே பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை இரண்டு எம்பிக்களும், ஒரு அமைச்சரும் முதல்வர் ஓபிஎஸ் அணிக்கு மாறி தங்கள் ஆதரவை கொடுத்த நிலையில் தற்போது எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்து அரசியலில் ஈடுபட்டு வரும் மூத்த அமைச்சரும் அதிமுக செய்தித்தொடர்பாளருமான பொன்னையன் அவர்களும் ஓபிஎஸ் அணிக்கு தன்னுடைய ஆதரவை தெரிவித்துள்ளார்.

சசிகலா அணியின் கூடாரம் கொஞ்சம் கொஞ்சமாக காலியாகி கொண்டு வருவதும், ஓபிஎஸ் அணி நிமிடத்திற்கு நிமிடம் வலுத்து வருவதையும் அரசியல் விமர்சகர்களும், கவர்னர் மாளிகையும், மத்திய அரசும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். எனவே வெகுவிரைவில் ஓபிஎஸ் அவர்கள் நிலையான ஆட்சியை அமைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.