close
Choose your channels

'பாகுபலி 2' பட வசூலும் ஏ.ஆர்.ரஹ்மானின் ரூ.2000 கோடி வாழ்த்தும்!

Monday, May 22, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான 'பாகுபலி 2' திரைப்படம் உலகம் முழுவதும் மாபெரும் வரவேற்பை பெற்று ரூ.1500 கோடி வசூலை இதுவரை தாண்டியுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தை சமீபத்தில் பார்த்த ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான், எஸ்.எஸ்.ராஜமெளலிக்கும் படக்குழுவினர்களுக்கு தனது சமூக வலைத்தளத்தில் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மான் தனது சமூக வலைத்தளத்தில், 'தற்போதுதான் சென்னையில் பாகுபலி-2` படத்தை பார்த்தேன். இந்த படம் ரூ.2000 கோடிக்கு மேல் வசூல் செய்யும் என்று நம்புகிறேன். ராஜமௌலியும், கீரவாணியும் தென்னிந்திய சினிமாவுக்கு உலக அரங்கில் புதிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர்' என்று புகழ்ந்து பாராட்டியுள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மானின் இந்த பாராட்டுக்கு நன்றி தெரிவித்துள்ள எஸ்.எஸ்.ராஜமெளலி, இந்த பாராட்டு தன்னை மட்டுமின்றி படக்குழுவினர் அனைவரையும் மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருப்பதாக கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.