close
Choose your channels

அர்ஜூனுடன் முதல்முறையாக இணைகிறார் பாபிசிம்ஹா

Thursday, August 20, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரசன்னா, சினேகா நடித்த 'அச்சமுண்டு அச்சமுண்டு' படத்தின் இயக்குனர் அருன் வைத்தியநாதனின் அடுத்த படத்தில் அர்ஜூன், பிரசன்னா மற்றும் வரலட்சுமி நடிக்கவிருப்பதை ஏற்கனவே அறிவித்திருந்தோம். இந்நிலையில் இந்த படத்தில் தேசிய விருது பெற்ற பாபிசிம்ஹா, மற்றும் வைபவ் ஆகியோர் தற்போது இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அர்ஜூன், பிரசன்னா, பாபிசிம்ஹா போன்ற முன்னணி நட்சத்திரங்கள் தனது படத்தில் இணைந்து பணியாற்ற ஒப்புக்கொண்டதில் தான் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பதாகவும், இன்னும் ஒருசில முக்கிய நடிகர்களிடம் பேச்சுவார்த்த நடந்து வருவதாகவும் இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளிவரும் என்றும் இயக்குனர் அருண் வைஹ்தியநாதன் கூறியுள்ளார்.

முதல்முறையாக பிரசன்னாவும் வரலட்சுமியும் இந்த படத்தில் டிடெக்ட்டிவ் ஏஜண்டுகளாக நடித்துள்ளதாகவும் இவர்களின் நண்பராகவும் போலீஸ் அதிகாரியாகவும் ஆக்சன் கிங் அர்ஜூன் இந்த படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்திற்கு அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவாளராகவும், நவீன் கல்யாண் இசையமைப்பாளராகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். நவீன் கல்யாண் ஏற்கனவே 'கல்யாண சமையல் சாதம்' படத்திற்கு இசையமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.