close
Choose your channels

தமிழகத்தின் தங்கமகன் மாரியப்பனுக்கு அர்ஜூனா விருது

Thursday, August 3, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் பிரேசிலின் ரியோ டி ஜெனீரோவில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற பாராஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதல் பிரிவில் தங்கப்பதக்கம் பெற்று தமிழகத்திற்கு மட்டுமின்றி இந்தியாவுக்கே பெருமை சேர்த்தார்.

சேலம் அருகே உள்ள சிறிய கிராமமான பெரியவடுகம்பட்டி என்ற கிராமத்தில் பிறந்து வளர்ந்து இன்று இந்தியாவின் புகழ்மிக்க ஒருவராக திகழும் மாரியப்பனுக்கு இன்று விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் மிகப்பெரிய விருதான அர்ஜூனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதால் மாரியப்பன் மட்டுமின்றி தமிழ்நாடே பெருமைப்படுகிறது.

மாரியப்பன் மட்டுமின்றி இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் சர்தார் சிங், பாக்சர் மனோஜ்குமார், தீபா மாலிக், தேவேந்திர ஜஜ்ஜாரியா மற்றும் வருண்சிங் ஆகியோர்களும் அர்ஜூனா விருதுக்கு தேர்வு பெற்றுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.