close
Choose your channels

ஜோதிகா கேரக்டரை ஏற்கும் அருள்நிதி

Tuesday, February 21, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'மொழி', 'அபியும் நானும்' உள்பட பல தரமான படங்களை இயக்கிய இயக்குனர் ராதாமோகன் இயக்கவுள்ள அடுத்த படமான 'பிருந்தாவனம்' படத்தில் அருள்நிதி நடிக்கவுள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் இந்த படத்தில் அருள்நிதி காதுகேட்காத, வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி கேரக்டரில் அவர் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த செய்தியை அருள்நிதி தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.

ஏற்கனவே ராதாமோகன் இயக்கிய 'மொழி' படத்தில் இதேபோன்ற ஒரு கேரக்டரில்தான் ஜோதிகா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜோதிகா நடித்த அதே கேரக்டரில் அருள்நிதியும் நடிப்பதால் இந்த படம், மொழி படத்தின் இரண்டாம் பாகமாக இருக்குமோ? என்ற கருத்தும் வெளிவந்து கொண்டிருக்கின்றது. ஆனால் இதை இயக்குனர் தரப்பு உறுதி செய்யவில்லை.

விவேக் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தை வாசன் மூவீஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. விஷால் சந்திரசேகர் இசையமைக்கும் இந்த படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி தான்யா ரவிச்சந்திரன் நடிக்கவுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.