close
Choose your channels

ஒரு வாரம் முன்னதாக அருள்நிதியின் போலீஸ் படம் ரிலீஸ்?

Tuesday, July 21, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

டிமாண்ட்டி காலனி' வெற்றிப்படத்தை அடுத்து அருள்நிதி நடித்த நகைச்சுவை படமான 'நாலு போலீஸும் நல்லா இருந்தா ஊரும்' திரைப்படம் வரும் 31ஆம் தேதி ரிலீஸாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஒரு வாரம் முன்னதாக, அதாவது வரும் 24ஆம் தேதி ரிலீஸாகவுள்ளதாக கூறப்படுகிறது.


ஜூலை 31ஆம் தேதி ஜெயம் ரவியின் சகலகலாவல்லவன், விமல் நடித்த மாப்ளே சிங்கம், மற்றும் விஜய் சேதுபதி தயாரித்து நடித்த 'மாப்ளே சிங்கம்' ஆகிய படங்கள் ரிலீஸ் ஆவதால், அருள்நிதி படத்தின் ரிலீஸ் தேதி மாற்றியமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது..

அருள்நிதி, ரம்யா நம்பீசன், சிங்கம்புலி, பகவதி பெருமாள், வெங்கட், மகேஷ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு பி.ஆர்.ரெஜின் இசையமைத்துள்ளார். மகேஷ் முத்துசுவாமி ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்தை சாபு ஜோசப் என்பவர் படத்தொகுப்பு செய்துள்ளார். ஸ்ரீகிருஷ்ணா இயக்கியுள்ள இந்த படத்தை லியோ விஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

அருள்நிதி, சிங்கம்புலி, பகவதி பெருமாள் மற்றும் ராஜ்குமார் ஆகிய நான்கு போலீஸ் கேரக்டர்களும் அமைதியாக இருக்கும் ஒரு கிராமத்தில் செய்யும் சேட்டைகளே படத்தின் ஜாலியான கதை. பீட்சா படத்திற்கு பின்னர் ரம்யா நம்பீசனுக்கு இந்த படத்தில் நல்ல கேரக்டர் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. புதுமாப்பிள்ளை அருள்நிதிக்கு திருமணத்திற்கு பிறகு வரும் முதல்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.