close
Choose your channels

அருள்நிதியின் புதிய படத்தில் இணைந்த பிரபல வில்லன் நடிகர்

Friday, March 24, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதலைமுறை நடிகர்களில் ஒருவராகிய அருள்நிதி நடித்த 'ஆறாது சினம்' கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வெற்றியை பெற்ற நிலையில் தற்போது அவர் 'இரவுக்கு ஆயிரம் கணகள் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

டாக்சி டிரைவராக அருள்நிதி நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக மஹிமா நம்பியார் நடிக்கின்றார். இந்த படத்தை மு.மாறன் என்பவர் இயக்கி வருகிறார். இவர் பிரபல இயக்குனர்கள் சுரேஷ் கிருஷ்ணா, கே.வி.ஆனந்த் ஆகியோர்களிடம் உதவியாளராக பணி புரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த படத்தில் தற்போது பிரபல வில்லன் மற்றும் குணசித்திர நடிகர் ஆனந்த்ராஜ் இணைந்துள்ளார். ஆனந்த்ராஜ் இந்த படத்தின் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக அருள்நிதி தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார். ஆனந்த்ராஜ் மட்டுமின்றி 'கோ' புகழ் அஜ்மல் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.

இந்த படம் தவிர ராதாமோகன் இயக்கத்தில் 'பிருந்தாவனம்' என்ற படத்திலும் அருள்நிதி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.