close
Choose your channels

அரசியல் குழப்பம் தீர இதுதான் சரியான முடிவு. அரவிந்தசாமியின் ஆலோசனை

Friday, February 10, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலை குறித்து பொதுமக்கள் மட்டுமின்றி திரையுலகினர்களும் அவ்வப்போது தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக பிரபல நடிகர் அரவிந்தசாமி அமைச்சர் ஒருவருக்கே பதிலடி கொடுக்கும் வகையில் கருத்து தெரிவித்திருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்நிலையில் சற்றுமுன்னர் நடிகர் அரவிந்தசாமி தனது சமூக வலைத்தளத்தில் 'தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அடக்கி வைக்கப்பட்டிருந்தால் அவர்களிடம் இருந்து எடுக்கப்படும் நம்பிக்கை வாக்கெடுப்பு எப்படி முறையானதாக இருக்கக்கூடும். ஜனாதிபதி ஆட்சி அல்லது மறுதேர்தல் ஆகிய இரண்டில் ஒன்றே சரியான முடிவாக இருக்கும்' என்று கூறியுள்ளார்.

அரவிந்தசாமியின் எண்ணப்படி தமிழகத்தில் மறுதேர்தல் வருமா? அல்லது குடியரசு தலைவர் ஆட்சி வருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.