close
Choose your channels

சசிகலா ஆதரவு அமைச்சருக்கு அரவிந்தசாமியின் பதிலடி

Thursday, February 9, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் யார் ஆட்சி அமைப்பார்கள் என்ற அசாதாரண சூழ்நிலை இருக்கும் நிலையில் எம்.எல்.ஏக்கள் சிறை வைக்கப்பட்டதாக வெளிவந்துள்ள செய்திக்கு சமூக வலைத்தளங்களில் கண்டனம், நையாண்டியுடன் பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து கருத்து கூறியஅமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தனது சமூக வலைத்தளத்தில் "கடந்த 48 மணி நேரமாக, எம்.எல்.ஏக்களை கிண்டல் மற்றும் நையாண்டி செய்தும், தொலைபேசியில் அழைத்து துன்புறுத்துவதும் நியாயமானதா? எங்கள் சுதந்திரத்துக்கான உரிமை எங்களிடம் உள்ளது" என்று பதிவு செய்துள்ளார். இவர் சசிகலா ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் மாஃபா பாண்டியராஜனின் இந்த கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் நடிகர் அரவிந்த்சாமி தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, "இந்த மாதிரியான தருணங்களில் மக்கள் கண்டிப்பாக அவர்களது கருத்தை வெளிப்படுத்த வேண்டும். அதற்கேற்றார் போல் நீங்கள் செயல்படுவீர்கள் என்ற நம்பிக்கையில். அது எப்படியான கருத்தாக இருந்தாலும் சரி" என்று பதிலளித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.