close
Choose your channels

'புலி' பட ரிலீஸ் தாமதம் ஏன்? ஆர்யா விளக்கம்

Tuesday, August 25, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் நடித்த புலி' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி செப்டம்பர் 17ஆம் தேதியில் இருந்து அக்டோபர் 1ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது என்பது அனைவரும் தெரிந்ததே. இந்த படத்தின் கிராபிக்ஸ் பணிகள் தாமதமாவதே பட ரிலீஸ் தேதியை தள்ளி வைக்க காரணம் என படக்குழுவினர் தரப்பில் இருந்து கூறப்பட்ட நிலையில், ஆர்யாவின் யட்சன்' திரைப்படம் செப்டம்பர் 11ஆம் தேதி ரிலீஸ் ஆவதால்தான் 'புலி' ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டதாக பிரபல சமுக வலைத்தளம் ஒன்றில் #PuliBackedDueToYatchan என்ற ஹேஷ்டேக்கை ஒருசிலர் உருவாக்கி அதில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவு செய்து வந்தனர்.

இதுகுறித்து 'யட்சன்' ஹீரோ ஆர்யாவின் கவனத்திற்கு வந்தபோது அவர் இதற்கு விளக்கம் அளித்துள்ளார். 'இது ஒரு முட்டாள்தனமான ஹேஷ்டேக். புலி உண்மையில் அதன் சிஜி பணியின் காரணமாகவே தாமதமாகியுள்ளது. ஆகையால் யாரும் டென்ஷன் அடைய வேண்டாம் என கூறியுள்ளார்.

தற்போதுள்ள சூழ்நிலையில் விஜய் படங்களின் மாஸ் ஓப்பனிங் அனைவரும் தெரிந்ததே. அவரது துப்பாக்கி, கத்தி போன்ற படங்கள் ரூ.100 கோடிக்கும் மேல் வசூலை குவித்து இதனை நிரூபித்துள்ளது. எனவே வளர்ந்து வரும் ஒரு இளம் நடிகரின் படத்திற்கு பயந்து விஜய் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது என்று கூறுவதை யாரும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதே உண்மை. சமூக வலைத்தளங்களில் இதுபோன்ற வீண் விவாதங்களை தவிர்த்துவிட்டு பல ஆக்கபூர்வமான கருத்துக்களை விவாதிப்பதே நல்லது என்பதே அனைவரும் கருத்தாக உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.