close
Choose your channels

படப்பிடிப்பின்போது பிரபல தமிழ் நடிகர் காயம்

Thursday, March 16, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவர் அதர்வா. இவர் தற்போது 'செம போத ஆகாதே', 'ருக்குமணி வண்டி வருது', 'ஜெமினிகணேசனும் சுருளிராஜனும், 'இமைக்கா நொடிகள்' மற்றும் ஒத்தைக்கு ஒத்தை' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அறிமுக இயக்குனர் பர்னேஷ் இயக்கி வரும் 'ஒத்தைக்கு ஒத்தை' படத்தின் படப்பிடிப்பு சேலம் கல்லூரி ஒன்றில் நடந்து வருகிறது. இந்த படப்பிடிப்பில் அதர்வா மற்றும் சுஜான் சண்டைக்காட்சியின் படப்பிடிப்பு நடைபெற்றபோது டூப் இல்லாமல் அதர்வா டைவ் அடித்த காட்சி ஒன்றின்போது அதர்வாவுக்கு எதிர்பாராதவிதமாக காயம் ஏற்பட்டது. இருப்பினும் அவர் காட்சியை முடித்துவிட்டு பின்னர் சிகிச்சை எடுத்து கொண்டதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.

அதர்வா முக்கிய வேடத்தில் நடிக்கும் 'ஒத்தைக்கு ஒத்தை' படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா, கல்லூரி மாணவி வேடத்தில் நடிக்கின்றார். மேலும் சைவம் படத்தில் நடித்த வித்யா பிரதீப், ஹரீஷ் உத்தமன், தியாகராஜன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு 80% முடிந்துவிட்டதாகவும், மிக விரைவில் இந்த படத்தின் டீசர் வெளியீடு குறித்த தகவல் வரும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.