close
Choose your channels

50 ஆண்டுகள் பிரச்சனைக்கு தீர்வு காணும் அதர்வா

Thursday, July 2, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

எஸ்.பி.பி. சரண் தயாரிப்பில் கடந்த 2009ஆம் ஆண்டு வெளிவந்த 'குங்குமப்பூவும் கொஞ்சு புறாவும்' படத்தை இயக்கிய ராஜ்மோகன், ஆறு வருடங்கள் கழித்து தற்போது தனது இரண்டாவது படத்தை இயக்கவுள்ளார். முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் உருவாகவிருக்கும் இந்த படத்தில் நாயகனாக நடிக்க அதர்வா சமீபத்தில் ஒப்பந்தம் செய்யபப்ட்டுள்ளார்.

ஏற்கனவே அதர்வா 'சண்டிவீரன்' என்ற கிராமத்து பின்னணி படம் ஒன்றில் நடித்து கொண்டிருக்கும் அதர்வா, தற்போது மற்றொரு கிராமத்து படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் கதை 1957ஆம் ஆண்டு நடக்கவுள்ளதாக இருக்கும் என்றும், தேனி, கொடைக்கானல் மற்றும் மறையூர் ஆகிய பகுதிகளில் வரும் 15ஆம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக இயக்குனர் ராஜ்மோகன் கூறியுள்ளார். மேலும் கடந்த 1957ஆம் ஆண்டிலிருந்து 2015 ஆம் ஆண்டு வரை ஒரு கிராமத்தில் தீர்க்க முடியாத பிரச்சனை ஒன்றுக்கு அதர்வா வித்தியாசமான முறையில் தீர்வு காண்பதுதான் படத்தின் முக்கிய அம்சம் என்றும் ராஜ்மோகன் கூறியுள்ளார்.

உண்மைச்சம்பவங்கள் மற்றும் தன்னுடைய கற்பனைக்காட்சிகள் ஆகிய இரண்டும் கலந்து உருவாகும் இந்த படத்தில் அதர்வா கிராமத்தில் வாழும் அன்பு, பாசம், காதல் கொண்ட உள்ள ஒரு இளைஞராக நடிக்கவுள்ளார். மேலும் இந்த படத்தில் தம்பி ராமையா, எஸ்.பி.பி சரண் ஆகியோர்களும் நடிக்கவுள்ளனர். இந்த படத்தின் நாயகி தேர்வு நடைபெற்று வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.