close
Choose your channels

மூன்றாவது வாரத்திலும் வசூலில் சாதனை புரிந்த மகிழ்மதி மன்னன்

Monday, May 15, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகம் முழுவதும் ரசிகர்கள் மனதில் இடம்பெற்றது மட்டுமின்றி, வசூலிலும் சாதனை புரிந்த எஸ்.எஸ்.ராஜமெளலியின் பிரமாண்டமான படைப்பான 'பாகுபலி 2' திரைப்படம் மூன்று வாரங்கள் ஆகியும் திருப்திகரமான வசூலை இன்னும் கொடுத்து வருகிறது. ஏற்கனவே இந்த படத்தின் இரண்டு வார சென்னை வசூல் சாதனை குறித்து நாம் பார்த்துள்ளோம். தற்போது மூன்றாவது வார இறுதி சென்னை வசூல் குறித்து தற்போது பார்ப்போம்

இந்த படம் கடந்த வார இறுதியில் சென்னையில் 19 திரையரங்குகளில் 412 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.1,46,71,330 வசூலித்துள்ளது. மூன்றாவது வாரத்திலும் மகிழ்மதி மன்னனை பார்க்க 85% பார்வையாளர்கள் திரையரங்குகளில் நிரம்பியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படம் கடந்த மாதம் 28ஆம் தேதியில் இருந்து நேற்று வரை ரூ.11,71,32,430 வசூல் செய்து சென்னையில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. மேலும் இந்த படத்தின் மூன்று மொழிகளின் மொத்த வசூல் ரூ.13,44,17,810 என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.