close
Choose your channels

ரஜினி, அஜித் படங்களுக்கு அடுத்த இடத்தை பிடித்த 'பாகுபலி'

Wednesday, April 5, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகில் இதுவரை சூப்பர் ஸ்டார் ரஜினியின் கபாலி மற்றும் தல அஜித்தின் 'என்னை அறிந்தால்' ஆகிய படங்கள் தமிழகத்தில் 600க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது. இந்த நிலையில் ரஜினி, அஜித் படங்களை அடுத்து எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி 2' திரைப்படம் தமிழகத்தில் 600க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாக புக் ஆகியிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இம்மாதம் 28ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ள 'பாகுபலி 2' படத்திற்கு இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. முதல் பாகத்தின் மாபெரும் வெற்றி, கட்டப்பாவின் ரகசியம், டிரைலருக்கு கிடைத்த உலகளாவிய வரவேற்பு ஆகியவை இந்த படத்தின் எதிர்பார்ப்புக்கு காரணமாக உள்ளது. சினிமாவே பார்க்காதவர்கள் கூட இந்த படத்தை பார்க்க திரையரங்குகளுக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் 'பாகுபலி 2' படத்தை ரிலீஸ் செய்ய கிட்டத்தட்ட தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்கு உரிமையாளர்களும் முன்வந்துள்ளதால் தற்போதைய தகவலின்படி தமிழகம் முழுவதும் 600க்கும் மேற்பட்ட திரையரங்குகள் புக் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.

பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ராணா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன், உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு எம்.எம்.கீரவானி இசையமைத்துள்ளார். கே.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவில், வெங்கடேஸ்வரராவ் படத்தொகுப்பில் இந்த படம் சுமார் 200 கோடிக்கும் மேல் செலவு செய்து உருவாக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.