close
Choose your channels

ஆறாவது வாரத்திலும் அசராமல் வசூல் செய்து வரும் 'பாகுபலி 2'

Monday, June 5, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி' திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி வெளியாகி ஆறாவது வாரமாக உலகின் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக திரையிடப்பட்டு வருகிறது.

இந்த படத்தின் உலகளாவிய வசூல் ரூ.1600 கோடியை தாண்டிவிட்ட நிலையில் சென்னையிலும் இந்த படம் அசைக்க முடியாத வசூலை பெற்றுள்ளது. ஆறாவது வாரத்திலும் சென்னையில் இந்த படம் 16 திரையரங்க வளாகங்களில் 118 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.32,89,560 வசூல் செய்துள்ளது. இந்த படத்திற்கு 75% பார்வையாளர்கள் நிரம்பியிருந்தது இந்த படத்திற்கு இன்னும் ரசிகர்கள் மத்தியில் இன்னும் செல்வாக்கு இருப்பதையும், மீண்டும் மீண்டும் ரசிகர்கள் இந்த படத்தை பார்த்து வருகின்றனர் என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது.

மேலும் இந்த படம் சென்னையில் கடந்த ஏப்ரல் 28ல் இருந்து ஜூன் 4 வரை மொத்தம் ரூ.15,88,78,390 வசூல் செய்துள்ளது. அதேபோல் சென்னையில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளிலும் சேர்ந்து ரூ.17,94,59,660 வசூல் செய்துள்ளது. சென்னையின் நம்பர் ஒன் வசூல் படமாக விளங்கும் இந்த படத்தின் வசூலை முறியடிக்க பல ஆண்டுகள் ஆகும் என்று கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.