close
Choose your channels

'பாகுபலி 2' படப்பிடிப்பு தொடங்கும் தேதி

Wednesday, November 25, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்தியாவின் மாபெரும் பட்ஜெட் படமான எஸ்.எஸ்.ராஜமவுலியின் 'பாகுபலி' திரைப்படம் கடந்த ஜூலை மாதம் வெளியாகி உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்று சுமார் ரூ.600 கோடி வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் தேதி குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது.


'பாகுபலி 2' திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் 15ஆம் தேதி தொடங்கவுள்ளதாகவும், வரும் 2016ஆம் ஆண்டு ஜூலை மாதம் 31ஆம் தேதி படப்பிடிப்பு முடியும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த படத்தின் 40% படப்பிடிப்பு முதல் பாகத்தின்போதே எடுத்து முடிக்கப்பட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

2016ஆம் ஆண்டு இறுதிக்குள் இந்த படத்தின் கிராபிக்ஸ் உள்பட போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் முடிக்கப்பட்டு 2017ஆம் ஆண்டு ஆரம்பத்தில் ரிலீஸ் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 'பாகுபலி 2' படத்தில் முதல் பாகத்தில் நடித்தவர்களே நடிக்கின்றார்கள் என்றும் புதியதாக யாரும் இணையவில்லை என்றும் கூறப்படுகிறது.

முதல்பாகத்தில் பாகுபலியை கொலை செய்தது கட்டப்ப்பா' தான் என சஸ்பென்ஸுடன் முடித்துள்ளதால், கட்டப்பா ஏன் பாகுபலியை கொலை செய்தார் என்பதை அறிய ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.