close
Choose your channels

ராஜமெளலியின் அடுத்த படத்தில் கிராபிக்ஸ் இல்லையா?

Friday, March 17, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் படங்கள் என்றாலே முக்கியமான இரண்டு விஷயங்கள் இருக்கும். ஒன்று பிரமாண்டமான செட்கள் மற்றொன்று கிராபிக்ஸ். குறிப்பாக நான் ஈ, பாகுபலி, பாகுபலி 2 ஆகிய படங்களில் உலக தரத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் தத்ரூபமாக அமைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் எஸ்.எஸ்.ராஜமெளலியின் அடுத்த படத்தில் கிராபிக்ஸ் இல்லையாம். இந்த தகவல் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 'பாகுபலி 2' படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய ராஜமெளலி, 'நான் என்னுடைய அடுத்த படத்தை கமலக்கண்ணனின் உதவி இல்லாமல், அதாவது கிராபிக்ஸ் இல்லாமல் உருவாக்கவுள்ளேன்' என்று கூறியுள்ளார்.

இந்த அறிவிப்பு காரணமாக ராஜமெளலியின் அடுத்த படம் சரித்திர படமாக இல்லாமல் சமூக படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக 'பாகுபலி 2' படத்தில் முதல் பாகத்தில் கிராபிக்ஸ் இயக்குனராக பணிபுரிந்த ஸ்ரீனிவாஸ் மோகன், ரஜினியின் '2.0' படத்தில் கமிட் ஆகிவிட்டதால், கமலக்கண்ணன் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.