close
Choose your channels

'பாகுபலி' கிளைமாக்ஸில் திடீர் மாற்றம்?

Tuesday, July 14, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

எஸ்.எஸ்.ராஜமவுலியின் பிரமாண்ட திரைப்படமான 'பாகுபலி' திரைப்படம் கடந்த வெள்ளியன்று ரிலீஸாகி இந்தியாவிலேயே முதல் மூன்று நாட்களில் அதிக வசூல் செய்த சாதனைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.


இந்த படத்தின் பிரமாண்டம், பிரபாஸின் அற்புதமான நடிப்பு, கேமிராவின் மாயாஜாலம், தமன்னாவின் அழகு, பிரமிப்பூட்டும் பின்னணி இசை, கிராபிக்ஸ் காட்சிகளின் அற்புதம் ஆகிய பல பாசிட்டிவ் கருத்துக்கள் இந்த படம் குறித்து பேசப்பட்டு வந்தாலும், படத்தின் முடிவு இடைவேளையில் வரும் சஸ்பென்ஸ் காட்சி போல இருப்பதாகவும், சத்யராஜ் பேசும் ஒரு முக்கிய வசனத்துடன் படம் முடிவடைவது ஒரு முற்றுபெறாத படமாக இருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளது. குறிப்பாக ஆந்திராவில் உள்ள பிரபாஸ் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் இந்த கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

எனவே இதுகுறித்து தனது குழுவினர்களுடன் ஆலோசனை செய்த இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி, அடுத்த பாகத்தில் இடம்பெறக்கூடிய ஒருசில முக்கிய காட்சிகளை டிரைலர் போன்று ஒரு முன்னோட்டத்தை காண்பிக்க முடிவு செய்துள்ளதாகவும், இந்த காட்சிகள் இன்றுமுதல் அனைத்து திரையரங்குகளிலும் இணைக்க ஏற்பாடு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.