close
Choose your channels

எல்லா புகழும் ரஹ்மானுக்கே! எம்.எம்.கீரவானியின் நெகிழ்ச்சியான பதில்

Monday, May 8, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்திய திரைப்பட சரித்திரத்தில் இடம்பெற்ற 'பாகுபலி 2' படத்தின் வெற்றிக்கு அந்த படத்தில் பணிபுரிந்த ஒவ்வொருவரும் காரணம் என்றாலும், இசையமைப்பாளர் எம்.எம்.கீரவானியின் பங்கு கொஞ்சம் அதிகம்தான்.

இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் பிரமாண்டமான காட்சிகளுக்கு பொருத்தமான பின்னணி அமைத்து ஒவ்வொரு காட்சிகளுக்கும் உயிர் கொடுத்தவர் எம்.எம்.கீரவானி என்றால் அது மிகையாகாது.

இருப்பினும் இந்த படத்தின் பாடல்களில் தென்னிந்தியாவின் முன்னணி பாடகர், பாடகிகளை அவர் பயன்படுத்தாதது ஏன் என்று சமூக வலைத்தளத்தில் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதில் கூறிய எம்.எம்.கீரவானி, 'இதற்கு முக்கிய காரணம் ஏ.ஆர்.ரஹ்மான் தான் என்றும், அவர்தான் சின்ன சின்ன பாடகர்களை பெரிய ஆளாக்கியவர் என்றும், அவருடைய வழியை தானும் கடைபிடித்ததாகவும் கூறியுள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மானை விட வயதிலும் அனுபவத்திலும் பெரியவரான எம்.எம்.கீரவானி, அவர் வழியை பின்பற்றுவதாக கூறுவது அவர், ரஹ்மான் மீது எந்த அளவுக்கு மரியாதை வைத்திருக்கின்றார் என்பதை தெளிவாக காட்டுகிறது.

கடந்த 90ஆம் ஆண்டுகளில் இருந்தே ஏ.ஆர்.ரஹ்மான் ஏராளமான புதிய பாடகர், பாடகிகளை அறிமுகப்படுத்தியவர் என்றும், அவரால் அறிமுகம் செய்யப்பட்ட பலர் இன்று உலக அளவில் பிரபலம் என்பதும் அனைவரும் அறிந்ததே.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.