close
Choose your channels

விவாகரத்து வழக்கு: விஜய் பட வில்லனை எச்சரித்த நீதிபதி

Friday, June 16, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் நடித்த 'புலி' படத்தில் வில்லனாக நடித்த சுதீப், தனது மனைவி ப்ரியா மீது ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்ய முடிவு செய்தார். இதன்படி இருவரும் பெங்களூர் நீதிமன்றத்தில் விவாகரத்து மனுவை தாக்கல் செய்தனர்.
ஆனால் விவாகரத்து மனுவை தாக்கல் செய்த பின்னர் இருவரும் தங்கள் தவறை உணர்ந்து மீண்டும் சேர்ந்து வாழ முடிவு செய்தார்களாம். இதன் காரணமாக விவாகரத்து வழக்கை இருவரும் கண்டுகொள்ளவில்லை.
இந்த நிலையில் இந்த வழக்கு பெங்களூர் நீதிமன்றத்தில் 9 முறை இதுவரை விசாரணைக்கு வந்தது. அனைத்து விசாரணையிலும் இருதரப்பு வழக்கறிஞர்கள் ஆஜராகி சுதீப்-ப்ரியா ஆஜாராகாதற்கு காரணம் கூறி வந்தனர். இதனால் கடுப்பான நீதிபதி அடுத்த விசாரணைக்கு இருவரும் ஆஜராகவில்லை என்றால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று எச்சரித்துள்ளார்.
தற்போது வெளிநாட்டு படப்பிடிப்பில் இருக்கும் சுதீப், நாடு திரும்பியதும் நீதிமன்றத்தில் ஆஜராகி விவாகரத்து மனுவை வாபஸ் பெறுவார் என்று கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.