close
Choose your channels

கணவர் அழகாக இல்லை. திருமணமான 8 நாளில் கிரைண்டர் கல்லால் அடித்துக் கொலை செய்த மனைவி

Tuesday, April 11, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'கொலையும் செய்வாள் பத்தினி' என்று பழைய பழமொழி உண்டு என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அந்த பழமொழியை தவறாக புரிந்து கொள்ளும் ஒருசில பெண்கள், கணவரையே கொலை செய்யும் அளவுக்கு துணிந்துள்ளனர். கல்லானாலும் கணவன் என்று கூறிய பெண்கள் அந்த காலம், கல்லால் கணவனை கொல்வதுதான் இந்த காலம் என்பதை நேற்று நடந்த ஒரு சம்பவம் நிரூபித்துள்ளது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த சிற்ப வேலை செய்யும் ரமேஷ் என்பவருக்கும் விஜி என்பவருக்கும் கடந்த வாரம் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று மாலை விஜி திடீரென தனது வீட்டில் இருந்து வெளியே ஓடிவந்து தனது கணவர் ரத்த வெள்ளத்தில் இருப்பதாக கூறினார்.

இதுகுறித்த தகவல் அறிந்த போலீஸார் ரமேஷின் மர்ம மரணம் குறித்து விசாரணை செய்தனர். முதலில் மனைவி விஜியிடம் அவர்கள் துருவி துருவி விசாரணை செய்த போது அவர் கணவரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். தனது கணவர் அழகாக இல்லை என்று தன்னுடைய தோழிகள் கூறியதாகவும் இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறினார். இந்நிலையில் நேற்று கணவர் தாம்பத்ய உறவுக்கு அழைத்தபோது ஆத்திரமடைந்த தான், கணவர் தலைமீது கிரைண்டர் கல்லை தூக்கிபோட்டு கொலை செய்ததாக வாக்குமூலம் கூறியுள்ளார். இதன் பின்னர் விஜியை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.