close
Choose your channels

அந்த கதையும் என்னுடையதுதான். பாலாவுக்கு ரத்னகுமார் பதில்

Wednesday, April 13, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பாரதிராஜாவின் கனவுப்படம் என்று சொல்லப்படும் 'குற்றப்பரம்பரை' படத்தை பாலா இயக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்ததால் பாலா மற்றும் பாரதிராஜா ஆகிய இருவருக்கும் இடையே கடந்த சில நாட்களாக சொற்போர் நடந்து வருகிறது.


இந்த பரபரப்பில் பாரதிராஜா 'குற்றப்பரம்பரை' படத்திற்கு பூஜையை போட்டுவிட்டார். விரைவில் இந்த படம் தொடங்கவுள்ளது. இந்நிலையில் 'குற்றப்பரம்பரை' கதையை தான் படமெடுக்கவில்லை என்றும் அதே காலகட்டத்தில் நடந்த வேறொரு கதையை வேலராமமூர்த்தி 'கூட்டாஞ்சோறு' என்ற தலைப்பில் எழுதியுள்ளதாகவும், அந்த கதையுடன் கற்பனை சேர்த்து படமெடுக்கவுள்ளதாகவும் பாலா தெரிவித்தார்.

இந்நிலையில் தற்போது இதற்கு விளக்கமளித்துள்ள 'குற்றப்பரம்பரை' கதாசிரியர் ரத்னகுமார், தான் எழுதிய 'குற்றப்பரம்பரை' கதை விவாதத்தின்போது வேலராமமூர்த்தி இருந்ததாகவும், அப்போது அவர் திரட்டிய தகவல்கள் அடிப்படையில்தான் அவர் 'கூட்டாஞ்சோறு' கதையை எழுதியதாகவும், அந்த கதையும் என்னுடையதுதான் என்றும் கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து பாலா மற்றும் வேலராமமூர்த்தி மீது எழுத்தாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

பாலா தரப்பில் இருந்து எச்சரிக்கையும், பாரதிராஜா தரப்பில் இருந்து புகாரும் மாறி மாறி கொடுக்கப்பட்டு வருவதால் 'குற்றப்பரம்பரை' பிரச்சனைக்கு இப்போதைக்கு ஒரு முடிவு வராது போல தெரிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.