close
Choose your channels

பாவனாவின் திருமணத்தை தடுக்க முயற்சித்த விஐபி யார்?

Thursday, July 6, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த பிப்ரவரி மாதம் நடிகை பாவனா காரில் கடத்தப்பட்டு பாலியல் தொல்லைக்கு ஆளான சம்பவம் கேரள திரையுலகையே கதிகலங்க செய்தது. இந்த சம்பவத்தின் முக்கிய குற்றவாளி என்று கருதப்படும் பல்சர் சுனி கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

இந்த நிலையில் இந்த வழக்கில் பிரபல மலையாள நடிகர் திலீப் மற்றும் அவருடைய மனைவியும் நடிகையுமான காவ்யா மாதவனுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பல்சர் சுனி செய்தியாளர்களிடம் விரைவில் இந்த வழக்கில் பெரும்புள்ளி ஒருவர் சிக்கு வார் என்று கூறினார்.

இந்நிலையில் பாவனாவுக்கும் இயக்குனர் நவீனுக்கும் நடைபெறவிருந்த திருமணத்தை நிறுத்த பிரபல கேரள விஐபி ஒருவர் முடிவு செய்ததாகவும், அதன் தொடர்பாகவே இந்த கடத்தல் நடந்துள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாவனாவின் திருமணத்தை தடுக்க முயற்சித்த அந்த விஐபி யார் என்பதே தற்போது அனைவரும் கேள்வியாக உள்ளது. அந்த விஐபி விரைவில் கைது செய்யப்படுவார் என்றும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன,.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.