close
Choose your channels

இயல்பு நிலைக்கு விரைவில் திரும்புகிறார் பாவனா.

Tuesday, February 21, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த வாரம் பாலியல் தொல்லைக்கு ஆளாகிய நடிகை பாவனா, அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீண்டிருக்க மாட்டார் என்றே பலரும் நினைத்த நிலையில் தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பிற்காக அவர் தயாராகிவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
ஜினு ஆபிரஹாம் இயக்கவுள்ள 'ஆதம்' என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்த பாவனா, விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளாராம். பிரித்விராஜ் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் பிரபல தமிழ் மற்றும் மலையாள நடிகர் நரேன் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார்.
பாலியல் தொல்லையால் அதிர்ச்சி அடைந்து இருந்தபோதிலும் தமிழ், மற்றும் மலையாளத்தில் உள்ள சக நடிகைகள் அவருக்கு உறுதுணையாக குரல் கொடுத்ததால் தனக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை அவருக்கு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சக நடிகைகள் மற்றும் நண்பர்கள் கூறிய ஆறுதலால் கிட்டத்தட்ட நார்மல் நிலைக்கு பாவனா வந்துவிட்டதாகவும், இன்னும் ஓரிரு நாட்களில் அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளதாகவும் கூறப்படுகிறது
இதுபோன்ற ஒரு அதிர்ச்சியில் இருந்து மீண்டு வர நிச்சயம் மன உறுதியும் தைரியமும் வேண்டும். அந்த மன உறுதியுடன் பாவனா தனக்கு நேர்ந்த துன்பத்தில் இருந்து மீண்டு வந்ததற்கு அனைவரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.