close
Choose your channels

நடிகை பாவனாவின் வித்தியாசமான திருமண திட்டம்

Wednesday, May 3, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'சித்திரம் பேசுதடி,' 'அசல்', 'தீபாவளி' உள்பட பல படங்களில் நடித்த நடிகை பாவனா கன்னட தயாரிப்பாளர் நவீன் என்பவரை வரும் அக்டோபர் மாதம் திருமணம் செய்யவுள்ளதாக வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம். இந்த தகவலை தற்போது நடிகை பாவனாவும் உறுதி செய்துள்ளார்.

பாவனாவின் சொந்த ஊரான கேரள மாநில திருச்சூரில் நடைபெறவுள்ள இந்த திருமணம் குறித்த திட்டத்தை பாவனா தற்போது வெளியிட்டுள்ளார். இந்த திருமணத்தை ஆடம்பரம் இன்றி நடத்த விரும்புவதாகவும், அதுமட்டுமின்றி திருமண தினத்தில் சிம்பிளான உடை மற்றும் குறைந்த நகைகளுடன் கூடிய எளிமையான திருமணத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும் திருமணத்திற்கு பின்னர் சினிமாவை விட்டு விலகும் எண்ணம் இல்லை என்றும், தனது குடும்பத்தார்களும், தனது வருங்கால கணவர் குடும்பத்தினர்களும் தனது திரையுலக வாழ்க்கையை தொடர முழு ஒத்துழைப்பு வழங்க உறுதி கூறியுள்ளதாகவும் என்றும் கூறியுள்ளார்.

தென்னிந்தியாவில் குறிப்பாக மலையாளத்தில் பிசியாக இருக்கும் பாவனா, பிரித்விராஜூக்கு ஜோடியாக தற்போது நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.