close
Choose your channels

பரணியை அடுத்து ஓவியாவை ஓரங்கட்டும் பிக்பாஸ் குடும்பம்

Friday, July 21, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் குடும்பத்தில் உள்ள 15 பேர்களும் ஒற்றுமையாக ஒரே குடும்பமாக இருப்போம் என்று முதல் நாள் வாக்குறுதி அளித்தாலும், அந்த வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்டனர் என்பது அடுத்தடுத்து அவர்கள் நடந்து கொள்ளும் விதத்திலேயே தெரிந்துவிட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு யாரும் குடும்பமாக இருக்கவோ, நட்பை விரிவுபடுத்தவோ வரவில்லை. இது ஒரு கேம். இதில் யார் ஜெயிப்பது? யார் கோடிக்கணக்கான ரூபாய் பரிசை வெல்வது என்ற போட்டி மனப்பான்மை தான் அனைவரிடத்திலுமே உள்ளது.
இதனால் ஒருவரை ஒருவர் கவிழ்ப்பது எப்படி, அல்லது ஒருவரை ஒட்டுமொத்தமாக சேர்ந்து டார்ச்சர் கொடுத்து வெளியேற்றுவது எப்படி என்ற கணக்குதான் நடந்து வருகிறது.
அந்த வகையில் பரணியை ஒட்டுமொத்த குடும்பமும் இணைந்து பைத்தியம் பிடிக்கும் நிலைக்கு கொண்டு வந்து வெளியேற்றினர். இந்த நிலையில் இந்த போட்டியில் நடிகை ஓவியா கிட்டத்தட்ட வென்றுவிடுவார் என்றே பலருக்கு புரிந்துவிட்டது. எனவேதான் அனைவரும் ஒன்றுசேர்ந்து சதித்திட்டம் தீட்டி ஓவியாவை வெளியேற்ற முடிவு செய்துவிட்டனர். ஒன்று இந்த வீட்டில் ஓவியா இருக்கணும், அல்லது நாங்கள் இருக்கணும், பத்து பேரில் ஒன்பது பேர் ஒற்றுமையாகத்தான் இருக்கின்றோம், ஓவியா மட்டும் வேண்டாம், அவரை வெளியேற்றுங்கள் பிக்பாஸ்' என்று கோரஸாக முடிவெடுத்துள்ளதாக சற்றுமுன் வெளியான புரமோ வீடியோ மூலம் தெரியவந்துள்ளது
மற்றவர்கள் இந்த முடிவை எடுத்தது கூட ஆச்சரியப்பட வைக்கவில்லை. ஆனால் கதறியழுத ஜூலிக்கு கட்டியணைத்து ஆறுதல் சொன்ன ஓவியாவை வெளியேற்ற வேண்டும் என்று ஜூலி சொல்வது ஜீரணிக்க முடியாத அளவில் உள்ளது.
இந்த புரமோ வீடியோ வெளியானதில் இருந்து நெட்டிசன்கள் ஓவியாவிற்கு ஆதரவு கொடுத்தும் ஒன்பது பேர்களுக்கும் குறிப்பாக ஜூலி, காயத்ரி எதிரான ஆவேசமான கருத்துக்களை தெரிவித்தும் வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.