close
Choose your channels

ஆறுதல் கூறிய ஓவியா: துரோகம் செய்த ஜூலி: பரபரப்பில் பிக்பாஸ்

Friday, July 21, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கமல்ஹாசன் நடத்தி வரும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் நேற்று ஜூலி வயிற்று வலியால் துடித்தார். ஜூலியின் கதறலால் நமீதா, காயத்ரி தவிர மற்ற அனைவரும் அதிர்ச்சியாகி பிக்பாஸிடம் டாக்டரை உடனே வரவழைக்க கோரிக்கை விடுத்தனர். காயத்ரி, நமீதா மட்டுமே ஜூலி நடிப்பதாக கூறினர்.

இந்த நிலையில் ஜூலிக்கு ஆறுதல் கூறி அரவணைத்தது ஓவியா மட்டுமே. நடிக்கிறாய் என்று சொல்பவர்கள் சொல்லட்டும், நீ கவலைப்படாதே என்று அணைத்து, அழுது கொண்டிருந்த ஜூலியை தேற்றினார்.

ஆனால் ஆறுதல் கூறிய ஓவியா சென்றவுடன் ஓவியாவை பற்றி ஜூலி, காயத்ரியிடம் குறை கூறினார். நான் வயிற்றுவலியால் நடிப்பதாக ஓவியா கூறியதாகவும், நீங்கள் அப்படி நினைக்கிறீங்களா அக்கா என்று அப்பாவியாக கேட்டார் (நடித்தார்). ஜூலியின் இந்த கேள்வியால் ஆத்திரமான காயத்ரி, 'நான் என்ன நினைத்தால் உனக்கென்ன, என் மனசுக்கு என்ன தோணுகிறதோ அதைத்தான் சொல்வேன். நீ வயிற்றுவலியால் துடித்தபோது எனக்கு நீ நடிப்பது போலத்தான் தோன்றியது. அதனால் அப்படி சொன்னேன் என்று கூறிய காயத்ரி, இனிமே எனக்கும் உனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, என் மூஞ்சியிலேயெ நீ முழிக்காதே, என்று ஆத்திரத்துடன் கூறினார்.

ஒருபக்கம் ஜூலி, ஓவியாவை பற்றி குறை சொல்லிக்கொண்டிருக்கும் நிலையில், இன்னொரு பக்கம் ஜூலிக்காக ஓவியா சினேகனிடம் பரிந்துரை செய்தார். ஜூலிக்கு உண்மையிலேயே வயிற்று வலியா இல்லையா என்பது நமக்கு தெரியாது, நாம ஒண்ணும் டாக்டர் இல்லை, இருந்தாலும் ஒருவர் துடிக்கும்போது அவருக்கு உதவுதவது மனிதத்தன்மை, அந்த நேரத்தில் அவர் நடிக்கிறார் என்று கூறுவது சரியில்லை என்று கூறினார். ஏற்கனவே ஓவியாவுக்கு நெட்டிசன்களின் ஆதரவு அதிகம் இருக்கும் நிலையில் அவர் மீதான மரியாதை மேலும் இதனால் அதிகரித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.