close
Choose your channels

பிக்பாஸ் வின்னர் யார்? கடுப்புடன் கணித்த நமீதா

Monday, July 17, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கமல்ஹாசன் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி வந்தபோதிலும், தமிழகத்தில் மட்டும் சுமார் 4 கோடி பேர் பார்க்கும் அளவிற்கு அந்த நிகழ்ச்சி பிரபலம் ஆகிவிட்டது.
இந்த நிகழ்ச்சி ஆரம்பித்து ஒரு மாதம் ஆகிவிட்ட நிலையில் தற்போது ஐந்து பேர் வெளியேறிவிட்டனர். இந்நிலையில் தற்போது இன்னும் பத்து பேர் மட்டுமே உள்ளனர். அவர்களில் ஒருவர் இந்த நிகழ்ச்சியின் வின்னர் என்ற நிலை உள்ளது.
இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் வின்னர் யார் என்பது குறித்து சற்று கடுப்புடன் நமீதா புலம்புவதை இன்றைய புரமோ வீடியோவாக வெளியிட்டுள்ளனர். நமீதா ரைசாவிடம், 'நாம் வின்னராக வரமுடியாது. ஆடியன்ஸ்களுக்கு நம்மள மாதிரி ஆட்களை பிடிக்காது. ஜூலி போல் ஒரு முழு போலி, அல்லது ஓவியா போல் ஒரு முழு ஆக்டிங் திறன் உள்ளவர்களைத்தான் பிடிக்கும்' என்று கூறினார். மேலும் ஜூலி வின்னராக வந்தால் 'சரியில்லை, பட் ஓகே' என்று நமீதா கூறியுள்ளார்.
நமீதாவின் இந்த பேச்சை வைத்து பார்க்கும்போது இன்று ஒரு புயல் காத்திருப்பது போன்று தோன்றுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.