close
Choose your channels

பிக்பாஸ் வீட்டில் நுழைந்த மேலும் ஒரு நடிகர்

Thursday, August 17, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஓவியாவின் வெளியேற்றத்திற்கு பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சி முற்றிலும் டல்லடிக்க ஆரம்பித்துவிட்டதாகவே விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. சனி மற்றும் ஞாயிறு என இரண்டு நாட்கள் மட்டும் கமல்ஹாசன் நிகழ்ச்சியை விறுவிறுப்பாக கொண்டு சென்றாலும் மற்ற நாட்களில் சுவாரஸ்யம் இன்றி காணப்படுவதாக குற்றாச்சாட்டுக்கள் எழுந்து வருகின்றன.
இந்த நிலையில் நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்தை அதிகரித்தே தீரவேண்டிய கட்டாயத்தில் உள்ள சேனல் நிர்வாகம், நேற்று பிக்பாஸ் வீட்டிற்குள் நடிகை சுஜா வருணேவை அனுப்பி வைத்தது. அவரால் எந்த அளவுக்கு இந்த நிகழ்ச்சி மெருகேற போகின்றது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
இந்த நிலையில் இன்று 'பொறியாளன்' படம் உள்பட ஒருசில படங்களில் நடித்த ஹரிஷ் கல்யாண் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். மேலும் பிக்பாஸ் வீட்டிற்கு புதியதாக வருபவர்கள் வெளியே என்ன நடக்கின்றது என்பதை உள்ளே சொல்லக்கூடாது என்பது விதி. இதை கமல் அவர்களே பிந்துமாதவியிடம் கூறித்தான் உள்ளே அனுப்பினார். ஆனால் ஹரிஷ் கல்யாண் உள்ளே வந்தவுடன் வெளியே நடக்கும் விஷயங்களை மற்ற பங்கேற்பாளர்களிடம் கூறுகிறார். குறிப்பாக ஆரவ்வின் மருத்துவமுத்தம், சினேகனின் கட்டிப்பிடி வைத்தியம் ஆகியவை குறித்த பரபரப்பை விளக்குகிறார். இன்னும் என்னென்ன விஷயங்களை அவர் கூறப்போகிறார், அதனால் வீட்டில் என்ன பிரச்சனை ஆரம்பிக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.