close
Choose your channels

1186 மார்க் எடுத்த மாணவரின் தந்தையை அடித்து நொறுக்கிய பாஜகவினர்

Tuesday, September 5, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

முன்பெல்லாம் குறைந்த மார்க் அல்லது தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் மட்டுமே தற்கொலை செய்து கொள்வார்கள். ஆனால் இன்றைய காலத்தில் அதிக மதிப்பெண்கள் எடுத்தவர்கள், முதல் மதிப்பெண்கள் எடுத்தவர்கள் தற்கொலை செய்வது வாடிக்கையாகி வருகிறது. இதற்கு உதாரணம் அரியலூர் அனிதா.

1176 மதிப்பெண்கள் எடுத்தும் மருத்துவ படிப்பிற்கு இடம் கிடைக்காததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் அவரை விட அதிக மதிப்பெண் எடுத்த ஒரு மாணவனுக்கும் அதே நிலை ஏற்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகரில் ஒரு மாணவர் 1186 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். இருப்பினும் நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் அவருக்கு மருத்துவம் படிக்க இடம் கிடைக்கவில்லை. இந்த நிலையில் அந்த மாணவரின் தந்தை அய்யப்பன் என்பவர் செங்கத்தில் பாஜக ஒன்றிய செயற்குழு பொதுக் கூட்டம் நடந்த போது பாஜக அரசை எதிர்த்து கோஷம் போட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார். இதனால் ஆத்திரமடைந்த பாஜகவினர் அய்யப்பனை அடித்து உதைத்துள்ளனர். 

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு வந்து, அடித்த பாஜகவினரை கைது செய்யாமல், அடிவாங்கிய அய்யப்பனை கைது செய்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.