close
Choose your channels

பாம்புச்சட்டை படப்பிடிப்பு முடிந்தது.

Sunday, July 12, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

90களில் இயக்குனராகவும், தற்போது நகைச்சுவை நடிகராகவும் விளங்கிவரும் மனோபாலா, முதன்முதலில் தயாரித்த 'சதுரங்க வேட்டை' நல்ல லாபத்தை கொடுத்ததை அடுத்து, தற்போது ராதிகா சரத்குமாருடன் இணைந்து 'பாம்பு சட்டை' என்ற படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்ததாக படக்குழுவினர் உறுதி செய்துள்ளனர்.


தேசிய விருது பெற்ற பாபிசிம்ஹா நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இந்த படத்தில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் தாமிரபரணி" பானு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த ஆதம் தாசன் இந்த படத்தின் மூலம் இயக்குனராகிறார்.

இந்த படம், பாபிசிம்ஹாவின் முழு திறமையையும் வெளிப்படுத்தும் வகையில் அவருடைய கேரக்டரை அமைத்துள்ளோம். மேலும் திட்டமிட்டபடி இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டோம். இனி முழுவீச்சில் போஸ்ட் புரடொக்ஷன் பணிகளை தொடங்கி, விரைவில் படத்தை ரிலீஸ் செய்வோம்' என இயக்குனர் ஆதம்தாசன் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.