close
Choose your channels

சாமி 2: பெருமாள் பிச்சையை விட 10 மடங்கு பலசாலி வில்லன்

Friday, June 23, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சீயான் விக்ரம் தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் 'துருவ நட்சத்திரம்' மற்றும் விஜய்சந்தர் இயக்கத்தில் 'ஸ்கெட்ச்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் மீண்டும் இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாகவுள்ள 'சாமி 2' படத்தில் அவர் நடிக்கவுள்ளார்.
'சாமி' முதல் பாகத்தில் பெருமாள் பிச்சை என்ற பலசாலியான வில்லன் கேரக்டரில் கோட்டா சீனிவாசராவ் நடித்திருந்தார். இந்த நிலையில் 'சாமி 2' படத்தில் பெருமாள் பிச்சை கேரக்டரை விட பத்து மடங்கு பலசாலியான வில்லன் கேரக்டர் அமைந்திருப்பதாகவும், எனவே இந்த கேரக்டருக்கு ஈடுகொடுக்கும் வகையில் நடிப்புத்திறனை வெளிப்படுத்தும் பாபிசிம்ஹாவை வில்லன் கேரக்டருக்கு தேர்வு செய்திருப்பதாகவும் இயக்குனர் ஹரி கூறியுள்ளார்.
சீயான் விக்ரம், பாபிசிம்ஹா இருவருமே தேசிய விருது பெற்ற நடிகர்கள் என்பதால் இருவரும் போட்டி போட்டு நடிக்க வாய்ப்பு உண்டு என்றும் இயக்குனர் ஹரி தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.