close
Choose your channels

4 ரயில்களில் குண்டு வெடிக்கும்: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்த மிரட்டல் கடிதம்

Tuesday, April 25, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சட்டீஸ்கர் மாநிலத்தில் நேற்று மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் நடத்திய கொடூரமான தாக்குதலில் மூன்று தமிழக வீரர்கள் உள்பட 26 வீரர்கள் பலியான அதிர்ச்சியில் இருந்தே இன்னும் மீள முடியவில்லை.
இந்த நிலையில் மாவோயிஸ்ட்கள் பெயரில் சென்னை சென்ட்ரல் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் ஒன்று வந்துள்ளது. நான்கு எக்ஸ்பிரஸ் ரயில்களில் வெடிகுண்டு வைக்கப்போவதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக சென்னை சென்ட்ரல் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
மேலும், அந்தக் கடிதத்தில் ஒன்பது எண்கள் எழுதப்பட்டுள்ளதாகவும், 'அரக்கோணம் அருகே வெடிகுண்டு வெடிக்கும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. ரயில்வே போலீசார் இந்த கடிதம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.