close
Choose your channels

ஒரு மணி நேரத்தில் பிடிபட்ட சென்னை சென்ட்ரல் ரயில் வெடிகுண்டு மிரட்டல்காரர்

Tuesday, April 25, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடிக்கும் என்று ஒரு மிரட்டல் கடிதம் மாவோயிஸ்ட்களிடம் இருந்து வந்ததாக சற்று முன்னர் பார்த்தோம். இந்த கடிதம் வந்தவுடன் உடனடியாக விசாரணையில் இறங்கிவிட்டது போலீஸ்
அந்த மிரட்டல் கடிதத்தில் இருந்த ஒன்பது எண்கள் மற்றும் அரக்கோணம் அருகே குண்டுவெடிக்கும் என்று இருந்த வார்த்தைகள் ஆகியவற்றை கொண்டு போலீசார் தீவிரமாக விசாரணை செய்ததில் இந்த மிரட்டல் கடிதத்தை ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் கங்காதரன் என்பவர்தான் அனுப்பியுள்ளதாக ஒரு மணி நேரத்தில் போலீசார் கண்டுபிடித்தனர்.
உடனடியாக ரயில்வே போலிசார் கங்காதரன் இருக்கும் இடத்தை சுற்றி வளைத்து அவரை கைது செய்தனர். தற்போது அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. இவர் ஏற்கனவே கடந்த 2006ஆம் ஆண்டு இதேபோன்ற ஒரு மிரட்டல் கடிதத்தை அனுப்பியுள்ளார் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.