close
Choose your channels

பிரபல நடிகை-அரசியல்வாதி வீட்டில் வெடிகுண்டு மிரட்டல்

Saturday, May 6, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகையும் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான குஷ்புவின் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டதாக வந்த மர்ம போன் கால் ஒன்றால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நடிகை குஷ்பு தனது குடும்பத்தினர்களுடன் சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்றிரவு அவரது வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக தேனாம்பேட்டை பிரிவு 108 ஆம்புலன்ஸ் சேவை மையத்துக்கு மர்ம போன்கால் ஒன்று வந்தது. அதில் பேசிய நபர், 'நடிகை குஷ்புவின் பட்டினப்பாக்கம் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டியுள்ளார். இதனால் உடனடியாக உஷாரான போலிசார் நள்ளிரவு குஷ்புவின் பட்டினப்பாக்கம் வீட்டுக்குச் சென்று சோதனை நடத்தினர். பின்னர் நடத்திய விசாரணையில், வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி எனத் தெரியவந்தது.

இதனையடுத்து, மிரட்டல் விடுத்த மர்ம நபர் யார் என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் குஷ்பு தற்போது குடும்பத்தினர்களுடன் வெளிநாட்டு சுற்றுலா பயணத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.