close
Choose your channels

மதுரையில் உள்ள 52 எஸ்பிஐ வங்கிகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல்

Monday, June 19, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வெடிகுண்டு மிரட்டல் செய்பவர்கள் இதுவரை ஒரு இடம் அல்லது இரண்டு இடங்களுக்கு மட்டுமே வெடிகுண்டு மிரட்டல் விடுவதுண்டு. இவற்றில் பெரும்பாலும் வதந்திகளாக இருப்பது உண்டு.
இந்த நிலையில் இன்று மதுரையில் உள்ள 52 எஸ்பிஐ வங்கிகளுக்கும் ஒரே நேரத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மதுரையில் மொத்தமுள்ள 52 எஸ்பிஐ வங்கிகளின் கிளைகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து காவல்துறையினர் உடனடியாக வெடிகுண்டு நிபுணர்களுடன் இணைந்து மாநகரம் முழுவதும் உள்ள 52 கிளைகளிலும் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் மதுரையில் வங்கி கிளைகள் அமைந்துள்ள பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.