close
Choose your channels

விவசாயிகளை விட்டுக் கொடுக்க கூடாது. ஜி.வி.பிரகாஷ்

Monday, March 20, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழக விவசாயிகள் டெல்லியில் கடந்த 7 நாட்களாக காவிரி நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் இதுவரை இந்த போராட்டத்தை மத்திய அரசு கண்டுகொள்ளாமல் உள்ளது. விவசாயம் என்பது ஒரு நாட்டின் முதுகெலும்பு என்பதால் விவசாயிகளின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில் ஜல்லிக்கட்டு, நெடுவாசல் ஆகிய பிரச்சனைகளுக்காக குரல் கொடுத்த ஜி.வி.பிரகாஷ் இந்த போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்துள்ளதோடு, ஒரு தமிழனாக அனைவரும் இந்த போராட்டத்திற்கு குரல் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோ செய்தி ஒன்றில் கூறியிருப்பதாவது:

தமிழர்கள் அனைவருக்கும் வணக்கம். டெல்லியில் நம் தமிழக விவசாயிகள் ஆறாவது நாளாக போராடி வருகின்றனர். ஆனால் நாம் எல்லோரும் பார்த்து கொண்டிருக்கின்றோம். தமிழர்களாகிய நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து அவர்கள் கோரிக்கை நிறைவேற குரல் கொடுக்க வேண்டும். இந்தியாவின் முதுகெலும்பே விவசாயம்தான். அதை நாம் விட்டுக்கொடுக்க கூடாது.

நம்முடைய ஆதரவை கொடுக்க வேண்டியது மிக முக்கியம். எனவே எல்லா தமிழர்களும் ஒன்று சேருங்கள். டெல்லியில் இருக்கும் நம்முடைய விவசாயிகள் நம்முடைய உறவினர்களுக்கு நம் குடும்பத்தாருக்கு நமது ஆதரவை தெரிவிக்க வேண்டும்.

டெல்லியில் இருக்கும் விவசாயிகளின் கோரிக்கைகளின்படி காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட வேண்டும், நிலுவையில் இருக்கும் விவசாய கடன்கள் கொடுக்கப்பட வேண்டும், வறட்சி நிவாரண நிதி கொடுக்கப்பட வேண்டும், இனிமேல் எந்த தற்கொலைகளும் நிகழாமல் தடுக்கப்பட வேண்டும் என்று ஒரு தமிழனாய் இந்த கோரிக்கையை வைக்கிறேன்

இவ்வாறு ஜி.வி.பிரகாஷ் தனது வீடியோ செய்தியில் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.