close
Choose your channels

சி.ஆர்.சரஸ்வதி மீது அழுகிய தக்காளி வீச்சு. ஆர்.கே.நகர் மக்கள் ஆத்திரம்

Saturday, April 1, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தபோது அக்கட்சியின் செய்தி தொடர்பாளராக இருந்த சி.ஆர்.சரஸ்வதி 'அம்மா இட்லி சாப்பிட்டார், நலமாக இருக்கின்றார். மிகவிரைவில் போயஸ் கார்டன் திரும்புவார்' என்று கூறினார். ஆனால் ஜெயலலிதாவின் பிணம் மருத்துவமனையில் இருந்து போயஸ் கார்டன் திரும்பியது.
இந்நிலையில் தற்போது சசிகலா அணியில் இருக்கும் சி.ஆர்.சரஸ்வதி, ஆர்.கே.நகரில் போட்டியிடும் தினகரனுக்காக தொப்பி சின்னத்தில் வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்தார். சி.ஆர்.சரஸ்வதியை பார்த்ததும் அவர் ஜெயலலிதா குறித்து கூறியது மக்களின் ஞாபகத்தில் வந்து, கோபத்தை ஏற்படுத்த அவர் மீது பொதுமக்கள் அழுகிய தக்காளி மற்றும் காய்கறிகளை வீசினர். இதனால் அதிர்ச்சி அடைந்த சி.ஆர்.சரஸ்வதி, பிரச்சாரம் செய்யாமல் அந்த பகுதியில் இருந்து வேகமாக சென்றுவிட்டார்
ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகர் மக்கள், ஜெயலலிதாவின் மரணத்தை இன்னும் ஜீரணிக்க முடியாமல் சசிகலா தரப்பினர் மீது கடும் கோபத்தில் உள்ளதையே இந்த சம்பவம் காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.