close
Choose your channels

துரோகி அணியில் பாண்டியராஜன். சி.ஆர்.சரஸ்வதி ஆவேசம்

Saturday, February 11, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அதிமுகவின் மூத்த அமைச்சர்கள், முன்னணி நிர்வாகிகளே முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பக்கம் இருக்கும் நியாயத்தை உணர்ந்து அவரது ஆதரவாளர்களாக மாறி வருகின்றனர். இந்நிலையில் கடந்த சட்டமன்ற தேர்தலில் பல்லாவரம் தொகுதியில் தோல்வி அடைந்து மக்களால் ஒதுக்கப்பட்ட சி.ஆர்.சரஸ்வதி, முதல்வர் ஓபிஎஸ் அணிக்கு மாறி வருபவர்களை சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்து வருகிறார்.

ஏற்கனவே ஓபிஎஸ் முதல் அவரது அணிக்கு மாறிய மூத்த தலைவர்கள் அனைவரையும் விமர்சனம் செய்து வரும் சி.ஆர்.சரஸ்வதி, தற்போது இன்று ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு கொடுத்துள்ள அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அவர்களையும் விமர்சனம் செய்துள்ளார்.

கட்சிக்கு துரோகம் செய்யும் அணியில் பாண்டியராஜன் இணைந்துள்ளதாகவும், இவரை போன்றவர்களின் துரோகச் செயல்களால் அதிமுகவை உடைக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். கடந்த சில நாட்களாக சமூக வலைத்தள பயனாளிகளால் மிக அதிகமான கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகி வருபவர் சி.ஆர்.சரஸ்வதி என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.