close
Choose your channels

வெளிமாநிலங்களில் இருந்து எனக்கு கொலை மிரட்டல் வருகிறது. சி.ஆர்.சரஸ்வதி

Monday, February 20, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுக, சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இரண்டாக உடைந்தது. இதில் சசிகலா அணியின் ஆதரவாளராக மாறிய சி.ஆர்.சரஸ்வதி அவ்வப்போது தனது கருத்துக்களை தொலைக்காட்சி பேட்டி வழியாகவும், சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும் தெரிவித்து வருகின்றார்.

இந்நிலையில் இன்று அவர் சென்னை கமிஷனர் அலுவகத்திற்கு வந்து புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில் இரவு 10 மணிக்கு மேல் தனக்கு தமிழகத்தில் இருந்து மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் போன் மூலம் மிரட்டல் வருவதாகவும், அதில் தன்னை ஆபாச வார்த்தைகளால் மர்ம நபர்கள் திட்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இதேபோன்ற மிரட்டல் போன்கள் முன்னாள் அமைச்சர்கள் பா.வளர்மதி, கோகுல இந்திரா, மற்றும் நடிகை விஜயசாந்தி ஆகியோருக்கும் வருவதாகவும் இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தனது புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.