close
Choose your channels

தனித்து நின்றால் ஓபிஎஸ் ஜெயிக்க முடியுமா? சி.ஆர்.சரஸ்வதி

Wednesday, February 8, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நேற்று இரவு முதல்வர் ஓபிஎஸ் அவர்கள் சென்னை மெரீனாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் மெளனமாக உட்கார்ந்து கொண்டிருந்தபோது தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேட்டி அளித்த சி.ஆர்.சரஸ்வதி, 'கட்சிக்கும், ஆட்சிக்கும் எந்தவிதமான பிரச்சனையும் வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் அவர் அம்மாவின் நினைவிடத்தில் தியானம் செய்வதாக கூறினார்.

ஆனால் ஓபிஎஸ் செய்தியாளர் சந்திப்பில் சசிகலாவுக்கு எதிரான கருத்தை கூறிய அடுத்த நிமிடமே, ஓபிஎஸ் அவர்களை சரமாரியாக சி.ஆர்.சரஸ்வதி திட்ட ஆரம்பித்துவிட்டார்.

மேலும் அதிமுக என்ற கட்சி இல்லாமல், இரட்டை இலை என்ற சின்னம் இல்லாமல் ஓபிஎஸ்-ஆல் வெற்றி பெற முடியுமா? என்று சி.ஆர்.சரஸ்வதி சவால் விட்டார்.

சி.ஆர்.சரஸ்வதியின் அர்த்தமில்லாத சவாலும், அவருடைய நிமிடத்திற்கு நிமிடம் மாறும் கருத்துக்களும் நெட்டிஸன்களுக்கு கிடைத்த அல்வா போன்று உள்ளதாக கருதப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.