close
Choose your channels

என்.டி.டி.வி பிரணாய்ராய் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் திடீர் ரெய்டு

Monday, June 5, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்தியாவின் முன்னணி ஊடகங்களில் ஒன்றான என்.டி.டி.வி-யின் துணை நிறுவனர் பிரணாய்ராய் வீட்டில் இன்று காலை முதல் அதிரடியாக சிபிஐ சோதனை செய்து வருகிறது. இதுகுறித்த தகவல் அறிந்தவுடன் இந்தியாவின் முன்னணி ஊடகங்களின் நிருபர்கள் பிரணாய்ராய் வீட்டில் குவிந்துள்ளதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

என்.டி.டி. துணை நிறுவனர் பிரணாய் ராய் மற்றும் அவரது மனைவி ராதிகா ராய் ஆகியோர் மீது தனியார் வங்கி ஒன்றுக்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும் இதனடிப்படையில் இந்த ரெய்டு நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. டெல்லி மற்றும் டேராடூன் ஆகிய இடங்களில் ஒரே நேரத்தில் நான்கு இடங்களில் சிபிஐ சோதனை நடைபெற்று வருகிறது.

இந்த ரெய்டு என்.டி.டி.வி நிறுவனத்தின் மீதா? அல்லது பிரணாய் ராய் மற்றும் அவரது மனைவி ஆகியோர்களின் சொந்த நடவடிக்கைக்கா? என்பது குறித்த தகவல் இதுவரை வெளிவரவில்லை.

கடந்த 1988ஆம் ஆண்டு பிரணாய் ராய் மற்றும் அவரது மனைவி ராதிகா ஆகியோர் இணைந்து என்.டி.டி.வியை தொடங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.