|
உதயநிதியின் மனைவி கிருத்திகாவும் ஒரு இயக்குனர் என்பது எல்லாரும் அறிந்ததுதான். குறும்படங்களை இயக்கி அதற்கு ஏகப்பட்ட பாராட்டுகளையும் பெற்றிருக்கும் கிருத்திகா, இப்போது முழு நீள படம் ஒன்றையும் இயக்கப் போகிறார். இதில் உதயநிதி நடிக்கப் போகிறார் என்றும், இல்லையில்லை. தனுஷ்தான் நடிக்கப் போகிறார் என்றும் பரவலாக செய்திகள் பரவின. ஆனால் இதையெல்லாம் மறுத்தார் உதயநிதி. இந்த நிலையில் படத்தின் ஆரம்பகட்ட வேலைகளை ஜரூராக ஆரம்பித்துவிட்டாராம் திருமதி உதயநிதி. ஹீரோ? பலரையும் யோசித்து கடைசியில் ஜெய்யை முடிவு செய்திருக்கிறார்களாம். ஜெய் தற்போது ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தை அனீஸ் என்பவர் இயக்கிக் கொண்டிருக்கிறார். இந்த படப்பிடிப்பு முடிந்ததும் கிருத்திகா படம்தான் அவரது அடுத்த படமாக இருக்கப் போகிறது. பொதுவாக உதயநிதி தயாரிக்கும் படங்களில் பணியாற்றும் அத்தனை டெக்னீஷியன்களும் மிக பிரபலமானவர்களாக இருப்பார்கள். கிருத்திகா இயக்கும் படத்தில் மட்டும் சிக்கனத்தை கடைபிடிக்கப் போகிறார்களா என்ன? குஷிதான் ஜெய்க்கு.
|