close
Choose your channels

நடிகர் செந்தில் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தது ஏன்?

Wednesday, September 6, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நகைச்சுவை நடிகர் செந்தில், தினகரன் அணியின் ஆதரவாளர் என்பது அனைவரும் அறிந்ததே. சமீபத்தில் தினகரனை அவரது வீட்டில் சந்தித்த செந்தில், பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அந்த பேட்டியின்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணியின் ஆதரவாளரும், திருச்சி எம்பியுமான குமாரை அவதூறான வார்த்தைகளால் விமர்சனம் செய்ததாக கூறப்படுகிறது. அந்த பேட்டியின் வீடியோ விவரங்களை சேகரித்த குமார் தரப்பினர் தற்போது செந்தில் மீதும், செந்திலை தூண்டியதாக தினகரன் மீதும் புகார் மனு கொடுத்துள்ளனர்.

இந்த புகாரின் அடிப்படியில் செந்தில் மற்றும் தினகரன் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இதனால் விரைவில் நடிகர் செந்திலை போலிசார் விசாரணைக்கு அழைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.