close
Choose your channels

நரமாமிச அகோரிகளால் தி.நகர் திருப்பதி கோவிலில் தீட்டா?

Saturday, July 15, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னையின் திருப்பதி என்று அழைக்கப்படும் சென்னை தி.நகர் வெங்கட் நாராயணா சாலையில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி வழிபாடு செய்வது வழக்கம்.
இந்த நிலையில் இன்று திடீரென காலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரை சுவாமி தரிசனம் கிடையாது என்று தேவஸ்தானம் அறிவித்தது. கோவில் பூட்டியதற்கான காரணம் தெரியாததால் பொதுமக்களும் பக்தர்களும் குழப்பம் அடைந்தனர்.
இந்த நிலையில் திருப்பதி தேவஸ்தான கோவிலில் அகோரிகள் என்று கூறப்படும் நிர்வாண சாமியார்கள் இருவர் வழிபாடு செய்ததாக வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. நரமாமிசம் சாப்பிடுபவர்கள் என்று கூறப்படும் இந்த அகோரிகள் கோவிலுக்குள் நுழைந்ததால் கோவிலில் தீட்டு ஏற்பட்டுவிட்டதாகவும், அதனால் கோவிலை சுத்தம் செய்து சிறப்பு பூஜைகள் நடத்தவே நடை சாத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.