close
Choose your channels

பிரபல இயக்குனர் - ஒளிப்பதிவாளர் திடீர் மரணம்

Wednesday, April 26, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகின் பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான என்.கே.விஸ்வநாதன் சென்னையில் நேற்று திடீரென காலமானார். அவர் கடந்த சில நாட்களாக அவர் உடல்நலமின்றி இருந்தாலும் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் காலமானதாக தெரிகிறது.

கமல்ஹாசன் நடித்த பல படங்களுக்கு குறிப்பாக 'சட்டம் என் கையில்', 'கல்யாண ராமன்', 'கடல் மீன்கள்', 'மீண்டும் கோகிலா', 'சங்கர்லால்', போன்ற பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ள என்.கே.விஸ்வநாதன், 'இணைந்த கைகள்', 'நாடோடி பாட்டுக்காரன்', 'பெரிய மருது', உள்பட ஒருசில படங்களை இயக்கியுள்ளார். இவர் கடைசியாக கடந்த 2009ஆம் ஆண்டு நமீதா நடித்த 'ஜகன்மோகினி' என்ற திரைப்படத்தை இயக்கினார்.

என்.கே.விஸ்வநாதன் அவர்கள் மரணத்திற்கு கோலிவுட் பிரமுகர்கல் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.