close
Choose your channels

பிரபல காமெடி நடிகர் மீது போலீசில் புகார் அளித்த மனைவி

Tuesday, May 23, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல காமெடி நடிகரும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நடத்துபவருமான பாலாஜி மீது அவர் மனைவி தன்னை கணவர் கொடுமைப்படுத்துவதாக போலீசில் புகார் அளித்துள்ளார்.
ரஜினி, கமல், அஜித் ,விஜய் படங்கள் உள்பட ஏராளமான படங்களில் காமெடி வேடங்களில் நடித்து வருபவர் நடிகர் பாலாஜி. இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நடுவராகவும் இருந்து வருகிறார். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நித்யா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு போர்ஷிகா என்ற மகள் உள்ளார். பாலாஜி, நித்யா தம்பதிகள் இணைந்து டான்ஸ் ஷோக்களிலும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு காரணமாக, பாலாஜிக்கும் நித்யாவுக்கும் பிரச்னை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நித்யா நேற்று மாதவரம் போலீசில் பாலாஜி மீது திடீரென்று புகார் செய்துள்ளார். அந்த புகாரில் தன் சமுதாயத்தை பற்றி பாலாஜி தரக்குறைவாகப் பேசுவதாகவும் தன்னை கொடுமை செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து, போலீசார் விசாரணை செய்து வருவதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.