close
Choose your channels

மீண்டும் சர்ச்சைக்குரிய புகைப்படங்கள். என்ன நடக்குது சுசித்ராவின் சமூக வலைத்தளத்தில்?

Friday, March 3, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாடகி சுசித்ராவின் சமூக வலைத்தள பக்கத்தில் தனுஷ் குறித்த சர்ச்சைக்குரிய தகவல் பரப்பப்பட்டு பின்னர் அந்த தகவல் அவர் பதிவு செய்யவில்லை என்றும் அது ஹேக்கர்களின் கைவரிசை என்றும் அவரது கணவரால் விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்த பிரச்சனை ஓய்ந்து ஒருசில நாட்கள் கூட முடியவில்லை. ஆனால் அதற்குள் அவரது சமூக வலைத்தள பக்கத்தில் மீண்டும் சர்ச்சைக்குரிய வகையிலான புகைப்படங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக சில முன்னணி பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்கள் பதிவாகியுள்ளது.
இந்த பதிவுகளுக்கு மீண்டும் ஒருமுறை சுசித்ரா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற மோசமான பதிவு செய்யும் நபர் தான் இல்லை என்றும், அவ்வாறு நினைப்பவர்கள் தாராளமாக தன்னை தொடர வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் தனக்கும் நடிகர், நடிகைகளுக்கும் பெரிய அளவில் நட்பு இல்லை என்றும், அவர்களுடைய எந்த புகைப்படங்களும் தன்னிடம் இல்லை என்றும் தனது சமூக வலைத்தள கணக்கை முடக்க வேண்டும் என்று நினைக்கும் யாரோ ஒருவர் இந்த வேலையை செய்து கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு மேலும் என்னால் விளக்கம் அளித்து கொண்டிருக்க முடியாது என்பதால் தற்போதைக்கு எனது சமூக வலைத்தள கணக்கை முடக்க முடிவு செய்திருப்பதாகவும், இதற்காக தன்னை தொடரும் பயனாளிகளிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து காவல்துறையினர்களிடம் புகார் எதுவும் செய்யப் போவதில்லை என்றும், தனக்கு உண்மையானவர்களுக்கு நிச்சயம் தன் மீது நம்பிக்கை இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.,

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.