close
Choose your channels

நடிகர் சங்கம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை அஜித் கூறியது உண்மைதானா? எஸ்.வி.சேகர் விளக்கம்

Saturday, April 23, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தென்னிந்திய நடிகர் சங்கம் 'நட்சத்திர கிரிக்கெட் போட்டியை வெற்றிகரமாக நடத்தி முடித்தபோதிலும் இந்த போட்டியை நடத்த திட்டமிட்ட நாளில் இருந்து இன்றுவரை சர்ச்சைக்குரிய கருத்துக்கள், செய்திகள் வெளிவந்து கொண்டே இருக்கின்றது. குறிப்பாக அஜித் இந்த போட்டி குறித்து விமர்சனம் செய்ததாக பல்வேறு ஊடகங்களில் செய்தி வெளியானது.
நடிகர் சங்கத்திற்கு என சொந்த கட்டிடம் கட்டுவதற்கு நடிகர்களே பணம் போடலாம் என்றும் பொதுமக்களிடம் வசூல் செய்வது தேவையில்லாத ஒன்று என்றும் அஜித் கூறியதாக செய்திகள் வெளிவந்தது. இதுகுறித்து நடிகர் சங்கத்தின் சீனியர் உறுப்பினரும் அஜித்தின் நெருங்கிய நண்பருமான எஸ்.வி.சேகர் கூறியுள்ள கருத்தை தற்போது பார்ப்போம்.
நட்சத்திர கிரிக்கெட் குறித்தும், நடிகர் சங்க கட்டிடத்திற்கு கட்டிடம் கட்டுவதற்கு பணம் திரட்டுவது குறித்தும் அஜித் இதுவரை எந்த பத்திரிகை, அல்லது தொலைக்காட்சி பேட்டியிலும் கருத்து கூறவில்லை. அவர் கூறியதாக வந்த கற்பனைக்கருத்துக்கள் தான் பல்வேறு ஊடகங்களில் வதந்தியாக பரவியுள்ளது. அஜித், ஒரு தனிப்பட்ட நபரிடமோ அல்லது சங்கத்திடமோ ஏதாவது கருத்தை கூற வேண்டுமானால் நேரடியாக தைரியமாக சொல்லும் வகையை சேர்ந்தவர். உண்மை இவ்வாறு இருக்க அவர் கூறியதாக வந்த கற்பனைக்கருத்துக்களை ஊடகங்கள்தான் பெரிதாக்கியுள்ளது' என்று கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.