close
Choose your channels

நுங்கம்பாக்கம் ஸ்வாதி கொலை: நீதிமன்றம் எடுத்த அதிரடி முடிவு

Saturday, June 17, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட ஸ்வாதியின் வழக்கு, முறைப்படி இன்று நீதிமன்றத்தில் முடித்து வைக்கப்பட்டது. இதுகுறித்த அறிவிப்பை இன்று நீதிமன்றம் அறிவித்துள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24ஆம் தேதி, சூளைமேடு சௌராஷ்டிரா நகரைச் சேர்ந்த சாப்ட்வேர் எஞ்சினியர் ஸ்வாதி, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ராம்குமார் என்பவர் நெல்லை மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊரில், கடந்த ஆண்டு ஜூலை 1ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடந்து கொண்டிருந்த நிலையில் திடீரென அதே ஆண்டு செப்டம்பர் 19ஆம் தேதி புழல் சிறையில் அவர் தற்கொலை செய்து கொண்டார். சிறையில் மின்சார வயரை கடித்து அவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. ஆனால் ராம்குமாரின் குடும்பத்தினர் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்தனர்.
இந்த நிலையில் ஸ்வாதி கொலை வழக்கின் முழு அறிக்கையும் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆதாரங்களுடன் சமர்பிக்கப்பட்டதாக இந்த வழக்கின் விசாரணை அதிகாரி செய்தியாளர்களிடம் சற்று முன்னர் தெரிவித்தார். இதனை விசாரித்த நீதிபதி பிசி கோபிநாத், வழக்கு முறைப்படி முடித்து வைக்க உத்தரவிட்டார்.
இந்நிலையில் ஸ்வாதி கொலை வழக்கு என்ற பெயரில் திரைப்படம் ஒன்று எடுக்கப்பட்டு அதன் டிரைலரும் சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் இந்த படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று ஸ்வாதியின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.